18 பேருக்கு கொரோனா


18 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 March 2021 5:05 PM GMT (Updated: 8 March 2021 5:05 PM GMT)

18 பேருக்கு கொரோனா

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story