மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்


மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 1:48 AM IST (Updated: 9 March 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் காசாங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் பகுதியில் இருந்து காசாங் கோட்டை நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். இதில் ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து காசாங்கோட்டை பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் காசாங்கோட்டை கொட்டார தெருவை சேர்ந்த அறிவுச்செல்வனை(வயது 25) கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story