திருமணத்துக்கு பின்னர் தாய் பார்க்க வராததால் பெண் தற்கொலை


திருமணத்துக்கு பின்னர் தாய் பார்க்க வராததால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2021 9:25 PM GMT (Updated: 8 March 2021 9:25 PM GMT)

திருமணத்துக்கு பின்னா் தாய் பார்க்க வராததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு
ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). ஸ்கிரீன் பட்டறை உரிமையாளர். இவருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோனிகா (21) என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. மோனிகாவின் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் ஒருமுறை கூட மோனிகாவை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மோனிகா சம்பவத்தன்று கார்த்தியின் பட்டறையில் இருந்த ராசாயன மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோனிகா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story