போக்குவரத்து விதிகளை மீறிய 411 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 411 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 March 2021 5:53 PM GMT (Updated: 9 March 2021 5:53 PM GMT)

போக்குவரத்து விதிகளை மீறிய 411 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 13 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 204 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 41 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 16 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 136 பேர் மீதும் என மொத்தம் 411 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.61 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story