நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி


நெல்லை அருகே  தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 March 2021 8:02 PM GMT (Updated: 9 March 2021 8:02 PM GMT)

நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரையை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 44). கட்டிட தொழிலாளியான இவர் வடகரைகுளம் அருகில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார். 

அப்போது தடுப்பணை தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து குமாரவேலை வெளியே மீட்டனர். ஆனால் அதற்குள் குமாரவேல் தண்ணீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். குமாரவேல் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story