காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

x
தினத்தந்தி 23 March 2021 3:44 PM IST (Updated: 23 March 2021 3:44 PM IST)
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, குன்றத்தூர் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





