தீக்குளித்த லாரி டிரைவர் சாவு


தீக்குளித்த லாரி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 6 April 2021 9:11 PM GMT (Updated: 6 April 2021 9:11 PM GMT)

திண்டுக்கல் அருகே காதல் மனைவி கண்ணெதிரே உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி கே.ஆர்.நகர் பூங்கோடையை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 25). லாரி டிரைவர். 

அவருடைய மனைவி திரிபுரஜோதி. இவர்கள், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ், தனது அம்மாவுடன் கோவிலுக்கு செல்ல திரிபுரஜோதியை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். 

இதனால் மனம் உடைந்த செல்வராஜ், கடந்த 2-ந்தேதி திரிபுரஜோதியின் கண்ணெதிரே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

 சிறிதுநேரத்தில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாத அவர் வீதியில் ஓடினார். 

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், செல்வராஜ் மீது எரிந்த தீயை அணைத்தனர். 

உடல் கருகி, உயிருக்கு போராடிய செல்வராஜ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story