4 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது


4 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 9:29 PM IST (Updated: 19 April 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

4 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, 
கமுதி அருகே எழுவனூர் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலிப்பி என்ற ஊரைச்சேர்ந்த ஆதிமூலம் (வயது30) மூடையில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story