வாலாஜாபாத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு; விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி


வாலாஜாபாத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு; விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 April 2021 3:53 PM IST (Updated: 20 April 2021 3:53 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அவளூர் கிராமப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் மூலமாக அவளூர், ஆசூர், கொளத்தூர், நெய்வேலி, நெய்குப்பம், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, தம்மனூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில் இந்த ஆண்டு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவுப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் நேற்று முதல் செயல்பட துவங்கியது. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் அவளூர் மற்றும் சுற்று வட்டார கிராம விவசாயிகள் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
1 More update

Next Story