1,258 பேர் மீது வழக்கு


1,258 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 April 2021 5:53 PM GMT (Updated: 20 April 2021 5:53 PM GMT)

ராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,258 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 61 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக 3 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 650 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 177 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 30 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 337 பேர் மீதும் என மொத்தம் 1,258 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.


Next Story