போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2021 6:32 PM GMT (Updated: 20 April 2021 6:32 PM GMT)

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்:
இலுப்பூர் போக்குவரத்து அலுவலகம் நுழைவு வாயிலில் அருகே பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். கிளை செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வார ஓய்வை பறிக்காதே, போக்குவரத்துக்கழக விடுப்பு விதிகளை மாற்றாதே, தொழிலாளர் துறை அறிவுரைகளை மீறாதே, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கிடு, சம்பள பறிப்பு செய்யாதே போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்.பி.எப். போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story