திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 792 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 792 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 3:40 AM GMT (Updated: 30 April 2021 3:40 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 792 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

792 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 792 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதுவரை மாவட்டம் முழுவதும் 58 ஆயிரத்து 801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 பேர் சாவு

அவர்களில் 52 ஆயிரத்து 505 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 510 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 786 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்துள்ளனர்.

 


Next Story