மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி


மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 30 April 2021 8:32 PM GMT (Updated: 30 April 2021 8:32 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்தில்
மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
362 பேருக்கு சிகிச்சை
அரியலூர், மே.1-
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 73 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,606 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 5,191 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 362 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story