வடமாநில தொழிலாளி சாவு

x
தினத்தந்தி 2 May 2021 5:16 AM IST (Updated: 2 May 2021 5:16 AM IST)
வடமாநில தொழிலாளி சாவு
வடவள்ளி
உத்தர பிரதேசம் மித்தின்பூரை சேர்ந்தவர் பால்ராம் யாதவ் (வயது21). இவர் வடவள்ளி நவாவூர் பிரிவில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்தார். சம்பவத்தன்று இவர் அங்கிருந்த டர்பைன்ட் ஆயிலை எடுத்து இதை யாரால் குடிக்க முடியும் என்று நண்பர்களிடம் சவால் விட்டார். யாரும் முன்வரவில்லை.
இதனை தொடர்ந்து அவரே அதனை குடித்து விட்டார். இதனால் மயங்கிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





