ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 May 2021 6:55 PM GMT (Updated: 2 May 2021 6:55 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் பலியானார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை,சிங்கம்புணரி,தேவகோட்டை, காரைக்குடி ,திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 764 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.



Next Story