பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 7 May 2021 9:43 PM IST (Updated: 7 May 2021 9:43 PM IST)
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
மதுரை,மே.
மதுரை பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சோந்தவர் ஜெயசீலன் (வயது 45). இவர் மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டரை பார்த்து விட்டு பை-பாஸ் ரோடு காளவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





