ஆசிட் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு


ஆசிட் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு
x
தினத்தந்தி 8 May 2021 1:33 AM IST (Updated: 8 May 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆசிட் குடித்த பிளஸ்-1 மாணவி உயிரிழந்தார்

அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் பிரீத்தி(வயது 17). இவர், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி இவருக்கு வயிற்று வலி ஏற்படவே வலியால் துடித்த அவர் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்  குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story