மூதாட்டிகள் உள்பட 5 பேரின் உயிரை குடித்த கொரோனா


மூதாட்டிகள் உள்பட 5 பேரின் உயிரை குடித்த கொரோனா
x
தினத்தந்தி 9 May 2021 8:15 PM GMT (Updated: 9 May 2021 8:15 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டிகள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 82 வயது மூதாட்டி, வத்தலக்குண்டுவை சேர்ந்த 53 வயது ஆண், 60 வயது முதியவர், நிலக்கோட்டையை சேர்ந்த 58 வயது ஆண், நத்தத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகிய 5 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து அவர்கள் திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தனர். 

இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 235 ஆனது. 

இதற்கிடையே நேற்று மேலும் 105 பெண்கள் உள்பட 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அதேநேரம் 304 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

 இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. 


நேற்றைய நிலவரப்படி 1,786 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story