திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,000 பேர் பலி; நேற்று ஒரே நாளில் 22 பேர் சாவு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,000 பேர் பலி; நேற்று ஒரே நாளில் 22 பேர் சாவு
x
தினத்தந்தி 16 May 2021 10:31 AM GMT (Updated: 16 May 2021 10:31 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியான நிலையில், இதுவரை 1,000 பேர் இறந்துள்ளனர்.

1,551 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டும் அதன் தாக்கம் குறையவில்லை.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,551 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 79 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,000 பேர் பலி

அவர்களில் 70 ஆயிரத்து 292 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 730 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 100-க்கு குறைவாக தொற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 114 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 22 பேர் இறந்து உள்ளனர்.

 


Next Story