ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2021 12:31 AM IST (Updated: 17 May 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 3069 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.
1 More update

Next Story