கர்நாடகத்தில் புதிதாக 34,281 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 34,281 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 May 2021 6:31 PM GMT (Updated: 19 May 2021 6:31 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலியாகியுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலியாகியுள்ளனர். 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இறந்தவர்களின் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 29 ஆயிரத்து 538 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 ஆயிரத்து 281 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 6 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 49 ஆயிரத்து 953 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து  17 லட்சத்து 24 ஆயிரத்து 438 பேர் மீண்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 58 ஆயிரத்து 890 ஆக உள்ளது. 

மண்டியாவில் 730 பேர்

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 11 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 362 பேர், பல்லாரியில் 1,297 பேர், பெலகாவியில் 2 ஆயிரத்து 234 பேர், பெங்களூரு புறநகரில் 812 பேர், பீதரில் 149 பேர், சாம்ராஜ்நகரில் 576 பேர், சிக்பள்ளாப்பூரில் 555 பேர், சிக்கமகளூருவில் 1,047 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சித்ரதுர்காவில் 422 பேர், தட்சிண கன்னடாவில் 829 பேர், தாவணகெரேயில் 700 பேர், தார்வாரில் 871 பேர், கதக்கில் 486 பேர், ஹாசனில் 1,428 பேர், ஹாவேரியில் 170 பேர், கலபுரகியில் 440 பேர், குடகில் 197 பேர், கோலாரில் 895 பேர், கொப்பலில் 336 பேர், 
மண்டியாவில் 730 பேர், மைசூருவில் 1,730 பேர், ராய்ச்சூரில் 469 பேர், ராமநகரில் 304 பேர், சிவமொக்காவில் 819 பேர், துமகூருவில் 2 ஆயிரத்து 427 பேர், உடுப்பியில் 856 பேர், உத்தரகன்னடாவில் 833 பேர், விஜயாப்புராவில் 227 பேர், யாதகிரியில் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 218 பேரும், பல்லாரியில் 23 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 9 பேரும், சிக்கமகளூருவில் 4 பேரும், சித்ரதுர்காவில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் 2 பேரும், தாவணகெரேயில் ஒருவரும் இறந்து விட்டனர்.

சற்று அதிகரிப்பு

தார்வாரில் 10 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 9 பேரும், ஹாவேரியில் 11 பேரும், கலபுரகியில் 18 பேரும், குடகில் 3 பேரும், கோலாரில் 6 பேரும், கொப்பலில் 14 பேரும், மண்டியாவில் 9 பேரும், மைசூருவில் 14 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 6 பேரும், சிவமொக்காவில் 19 பேரும், துமகூருவில் 19 பேரும், உடுப்பியில் 5 பேரும், 

உத்தரகன்னடாவில் 14 பேரும், விஜயாப்புராவில் 5 பேரும், யாதகிரியில் ஒருவரும் என இவர்கள் உள்பட மொத்தம் 468 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. நேற்று முன்தினம் வைரஸ் தொற்று சுமார் 31 ஆயிரமாக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து 34 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

Next Story