முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 May 2021 9:29 PM GMT (Updated: 2021-05-20T02:59:43+05:30)

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தக்குமார், காதர்கான் உள்ளிட்ட போலீசார் கடைவீதி 4 ரோடு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு நின்று  காலை 10 மணிக்கு மேல் 2 சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story