கொரோனாவில் இறந்தவரை அடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்


கொரோனாவில் இறந்தவரை அடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்
x
தினத்தந்தி 20 May 2021 11:44 PM IST (Updated: 20 May 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இறந்தவரை எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் அடக்கம் செய்தனர்.

கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை தொடர்பு கொண்டனர். அதன்படி உலக சுகாதார துறையினர் வழிகாட்டுதலின்படி கொரோனாவில் இறந்த பெண் உடலை அடக்கம் செய்தனர்.
1 More update

Next Story