மேலும் 362 பேருக்கு கொரோனாஒருவர் பலி


மேலும் 362 பேருக்கு கொரோனாஒருவர் பலி
x
தினத்தந்தி 20 May 2021 11:44 PM IST (Updated: 20 May 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 362 பேருக்கு கொரோனாஒருவர் பலி

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,326 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 80 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 362 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,607ஆக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 92 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
1 More update

Next Story