மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 20 May 2021 8:23 PM GMT (Updated: 20 May 2021 8:23 PM GMT)

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்

வையம்பட்டி
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த காச்சகாரன்பட்டியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது பேரனுடன் அம்மாபாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வையம்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து சுப்பம்மாள் தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அடைந்த அவர்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story