தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி


தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
x
தினத்தந்தி 21 May 2021 1:45 PM GMT (Updated: 21 May 2021 1:45 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 689 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 32 ஆயிரத்து 26 பேர் குணம் அடைந்துள்ளனர்.அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 54, 68 வயதுடைய 2 பெண்களும், 54, 61, 61, 63, 64, 73, 81 வயதுடைய 7 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4 ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story