கொரோனா விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்


கொரோனா விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:00 PM GMT (Updated: 1 Jun 2021 8:00 PM GMT)

கொரோனா விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

பேரையூர்
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 91 பேர் மீது தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த 26 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறிய கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்த 6 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். இதேபோல் பேரையூர் தாசில்தார் சாந்தி மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது முக கவசம் அணியாத 8 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story