சூதாடிய 8 பேர் கைது

x
தினத்தந்தி 2 Jun 2021 1:30 AM IST (Updated: 2 Jun 2021 1:30 AM IST)
சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள விடுதியில் உள்ள ஒரு அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது பி.பீ.குளத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (வயது 52) உள்பட 8 பேர் என தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 25,580 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





