அழகர்கோவிலில் பலத்த மழை

x
தினத்தந்தி 5 Jun 2021 5:23 AM IST (Updated: 5 Jun 2021 5:23 AM IST)
அழகர்கோவிலில் பலத்த மழை பெய்தது.
அழகர்கோவில்,
தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி மதுரையை அடுத்த அழகர்கோவில், அழகர் மலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று மதியம் முதல் மாலை வரை லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் மழை தண்ணீர் கோவில் வளாகப் பகுதி பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அலங்காநல்லூர், காஞ்சரம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பெரியாறு பாசனபகுதிகளில் விவசாயிகள் நாற்று விடும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு பருமழை இந்த ஆண்டு தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





