விபத்தில் முதியவர் சாவு

x
தினத்தந்தி 7 Jun 2021 1:53 AM IST (Updated: 7 Jun 2021 1:53 AM IST)
விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65). சம்பவத்தன்று இவர் மொபட்டில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் சென்றார். அவர் வேகமாக செல்லும் போது திடீரென்று பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. அதில் பெரியசாமி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





