5 பேர் உயிரை பறித்த கொரோனா


5 பேர் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 15 Jun 2021 4:20 PM GMT (Updated: 15 Jun 2021 4:20 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

தேனி: 

5 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்புக்கு தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கெங்குவார்பட்டியை சேர்ந்த 59 வயது பெண், போடியை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

அதுபோல், தேனி பகுதியை சேர்ந்த 35 வயது பெண், 63 வயது மூதாட்டி, 47 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்தது.

150 பேருக்கு தொற்று
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 61 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 228 பேர் நேற்று குணமாகினர். இந்த வைரஸ் பாதிப்புடன் 1,584 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Next Story