நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 23 Jun 2021 7:49 PM GMT (Updated: 23 Jun 2021 7:49 PM GMT)

பராமரிப்பு பணிகளுக்காக நாளை அப்பையநாயக்கன்பட்டியில் மின்தடை செய்யப்படுகிறது.

சிவகாசி, 
சிவகாசி மின்வாரிய பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, நீதிமன்றம், கருமன்கோவில் ரோடு, விளாம்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, வீரார்பட்டி, மேலக்கோட்டையூர், சிறுகுளம், நல்லன்செட்டிபட்டி, சிவந்திபட்டி, குண்டலகுத்தூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story