செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 July 2021 3:38 AM GMT (Updated: 13 July 2021 3:38 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,374 உயர்ந்துள்ளது. இதில் 1,294 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,195 ஆக உயர்ந்துள்ளது. 491 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story