33-வது ஆண்டு விழா: “பா.ம.க.வினர் இன்று வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள்” டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


33-வது ஆண்டு விழா: “பா.ம.க.வினர் இன்று வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள்” டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 July 2021 12:50 PM GMT (Updated: 16 July 2021 12:50 PM GMT)

33-வது ஆண்டு விழா: “பா.ம.க.வினர் இன்று வீட்டிலேயே கொடியேற்றி கொண்டாடுங்கள்” டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட பா.ம.க., நாளை (இன்று) 32 ஆண்டுகளை நிறைவு செய்து 33-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடுமையான நெருக்கடியிலும் நாம் சமூகநீதி உரிமைகளை வென்றெடுப்பதில் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 5 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு நமது பிரதிநிதிகளை அனுப்பினோம்.

வழக்கமாக பா.ம.க. ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தங்களின் வீடுகளில் கொடியேற்றி 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என் மனதில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல், ‘‘எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திக்கப் போகிறேன்?’’ என்பது தான். மிக விரைவிலேயே அந்த நாள் வரும். அப்போது உங்களை சந்திக்க ஆவலுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story