மேலும் 19 பேருக்கு கொரோனா


மேலும் 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 July 2021 8:13 PM GMT (Updated: 16 July 2021 8:13 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 614 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. 


இதற்கிடையே நேற்று 6 பெண்கள் உள்பட மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 932 ஆனது. அதேநேரம் 24 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story