திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 74 பேர்பாதிப்பு; 3 பேர் பலி


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 74 பேர்பாதிப்பு; 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 July 2021 12:23 PM GMT (Updated: 18 July 2021 12:23 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 74 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 961 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 788 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,738 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர்.

Next Story