கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு


கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 July 2021 7:02 PM GMT (Updated: 25 July 2021 7:02 PM GMT)

கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு

திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள எலியார்பத்தியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். எலியார்பத்தியில் தூத்துக்குடி மதுரை நான்கு வழிச்சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற கார் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story