21 பேருக்கு புதிதாக கொரோனா


21 பேருக்கு புதிதாக கொரோனா
x
தினத்தந்தி 26 July 2021 4:39 PM GMT (Updated: 26 July 2021 4:39 PM GMT)

மதுரையில் 21 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை,ஜூலை
மதுரை மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 13 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 11 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 944 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 310 ஆக குறைந்துள்ளது. நேற்று மதுரையில் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1142 ஆக உள்ளது.

Next Story