லாரி மோதி கல்லூரி மாணவர் பலி


லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 26 July 2021 4:44 PM GMT (Updated: 26 July 2021 4:44 PM GMT)

லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

திருமங்கலம்,ஜூலை.
திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல். நிலையூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ஆதிநாராயணன் செல்வம் (வயது 19). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று மாலை ஆதிநாராயண செல்வம் கல்லணையில் இருந்து நிலையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். கல்லணை அருகே வந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிநாராயணன் செல்வம் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story