மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 6:24 AM GMT (Updated: 27 July 2021 6:24 AM GMT)

மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர்,

கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கட்டக்கூடிய அணையை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட கலெக்டர் மூலம் மத்திய அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ஜீவா, திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கட்டக்கூடிய அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

Next Story