4 வயது சிறுவனிடம் நகை திருட்டு

x
தினத்தந்தி 28 July 2021 10:50 PM IST (Updated: 28 July 2021 10:50 PM IST)
காதணி விழாவில் 4 வயது சிறுவனிடம் நகை திருடப்பட்டது.
வாடிப்பட்டி, ஜூலை
மதுரை சமயநல்லூர் அருகே ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 54). இவரது 4 வயது பேரனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் காதணி விழா நடத்தினார். அப்போது அந்த சிறுவன் அணிந்திருந்த 1¼ பவுன் தங்க தோடை கூட்டத்தில் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





