மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 7:10 PM GMT (Updated: 28 July 2021 7:10 PM GMT)

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, ஜூலை.
மதுரை முடக்குச்சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 24). பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பரத் இமானுவேல் (19). இவர்களின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருட்டு போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரின் உருவம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த நவீன்குமார் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தான் மோட்டார் சைக்கிள்களை திருடினார் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

Next Story