காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 2:42 PM GMT (Updated: 28 Aug 2021 2:42 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 692 -ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 71 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1229- ஆக உயர்ந்துள்ளது. 337 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story