ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி- புதிதாக 132 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
132 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 892 பேருக்கு பரிசோதனை செய்ததில், 115 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 98 ஆயிரத்து 153 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 148 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 96 ஆயிரத்து 47 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 1,453 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 64 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 27-ந்தேதி முதியவர் இறந்தார்.
மேலும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த, 76 வயது மூதாட்டி கடந்த மே மாதம் 13-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story