பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 5 Sep 2021 3:23 AM GMT (Updated: 5 Sep 2021 3:23 AM GMT)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வரும் 12, 19-ந் தேதிகளில் கீழ்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையே காலை 11, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.15, 12, 1.20, 2 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 11.30, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் கடற்கரை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.20, 11.30, 12.10, 12.30, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 10.15, 11, 12.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சீபுரத்தில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் எழும்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story