செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Sep 2021 6:17 AM GMT (Updated: 5 Sep 2021 6:17 AM GMT)

செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் நாவிதர் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர் இந்த குடியிருப்புகளின் நடுவே தனியார் நிறுவனத்தினர் செல்போன் கோபுரம் அமைக்க கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த இடத்திற்கு சென்று பள்ளம் தோண்டுபவர்களிடம் இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஒழலூர் கிராம நிர்வாக அலுவலர் பானுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

அனுமதியின்றி...

அப்போது, கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று நேற்று முன்தினம் கலெக்டரிடம் மனு அளித்தும், அதையும் மீறி பள்ளம் தோண்டுகிறார்கள்.

குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு குழந்தைகள் கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அனுமதியின்றி சட்ட விரோதமாக கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர். இதனையடுத்து அதிகாரிகள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தினர். இதனால் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story