காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 7 Sep 2021 4:48 AM GMT (Updated: 7 Sep 2021 4:48 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.பிறகு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-

பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது கடமையை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். அப்படி செயல்படுத்திய 9 ஆசிரியர்களுக்கு நமது மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கான தமிழக அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரிய பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நமது மாவட்டத்தினை கல்வியில் முன்மாதிரியான மாவட்டமாக உருவாக்கவும், பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

புனிதமான வேலை

கல்வித்துறையை பொறுத்தவரை நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு கையாளுவதால் இது மிகவும் கடினமான வேலையாகும். அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களிடமே குழந்தைகளை நம்பி விடுகிறார்கள்.

எனவே, இதுபோல் புனிதமான வேலை யாருக்கும் கிடைக்காது. இவ்விடத்தில் ஆசிரியப்பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க.செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி., க.செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் சி.இராதாகிருஷ்ணன் (ஸ்ரீபெரும்புதூர்), ஏ.எல்லப்பன் (காஞ்சீபுரம்) மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story