காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2021 5:33 AM IST (Updated: 11 Sept 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

கொரோனா நோயை தடுப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

100 சதவீதம் பாதுகாப்பானது

இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி முகாமை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 More update

Next Story