நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sep 2021 10:20 PM GMT (Updated: 11 Sep 2021 10:20 PM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 560-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தென்காசி மாவட்டத்திலும் நேற்று 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 26 ஆயிரத்து 604 பேர் வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story