செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 113 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 113 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 1:11 PM GMT (Updated: 13 Sep 2021 1:11 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 711 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 448 -ஆக உயர்ந்துள்ளது. 1119 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 250-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1234 பேர் உயிரிழந்துள்ளனர். 370 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story